ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பொதுவாக ஷங்கர் தன்னுடைய படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களிடம் படத்தின் கதையைப் பற்றி வெளியே யாரிடமும்... குறிப்பாக மீடியாக்களிடம் பேசக் கூடாது என்று கறாராக உத்தரவு போடுவார். அதனால் ஷங்கருடைய படத்தில் நடிக்கும் யாரும் கதையைப் பற்றி வெளிப்படையாக பேட்டி தர மாட்டார்கள். இந்த வழக்கத்தை உடைத்தெறிந்திருக்கிறார் 2.0 படத்தின் வில்லன்.
அஜித்தின் 'பில்லா 2' படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் சுதான்ஷு பாண்டே. இப்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'எந்திரன்' 2ஆம் பாகத்திலும் முக்கிய வேடமொன்றில் சுதான்ஷு பாண்டேதான் நடித்து வருகிறார். இப்படத்தில், சுதான்ஷு பாண்டேதான் மெயின் வில்லனாம். அதாவது ரோபோ அக்ஷய்குமாருடன் கூட்டணி அமைத்து சிட்டி ரோபோவை பழிவாங்கத் துடிக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.
கதைப்படி, 'எந்திரன்' முதல் பாகத்தில் சிட்டி ரோபோவால் கொலை செய்யப்படும் புரொபஸர் போராவின் மகன் கேரக்டரில்தான் '2.0'வில் நடிக்கிறாராம் சுதான்ஷு. இவருக்கும் '2.0' படத்தில் சயின்டிஸ்ட் கதாபாத்திரம்தானாம்.
சமீபத்தில் டில்லி நேரு ஸ்டேடியத்தில் அக்ஷய்குமாருடன் சுதான்ஷு பாண்டேவும் இணைந்து நடித்துள்ளார். இன்னும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவில்லையாம். கடந்த சில வாரங்களுக்கு முன் வட இந்திய பத்திரிகையில் 2.0 படத்தின் கதையைப் புட்டு புட்டு வைத்த சுதான்ஷு பாண்டே, தற்போது மீண்டும் பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி கொடுத்து ஷங்கரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.