600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
இந்தியத் தேர்தல் ஆணையம் நடைபெற இருக்கின்றன சட்டசபை தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக பலவிதமான செயல்களைச் செய்து வருகிறது. ஆனால், மக்களிடையே மதிப்பு மிக்கவர்களாக விளங்கம் சிலர் வேண்டுமென்றே தேர்தலில் ஓட்டளிக்கும் கடமையில் இருந்து தவறுவது ஏன் என்றுதான் தெரியவில்லை.
தமிழ்த் திரையுலகில் உலகம் போற்றும் கலைஞர்களாக விளங்கும் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரும் வரும் மே 16ம் தேதி ஓட்டுப் போட வருவார்களா என்பது சந்தேகமே. நடிகர் கமல்ஹாசன் அன்றைய தினம்தான் அவருடைய 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் ஆரம்பிக்க உள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அன்றைய தினம் மலேசியாவில் இசைக் கச்சேரி ஒன்றை நடத்த உள்ளார்.
கிராமத்தில் இருக்கும் படிப்பறிவு இல்லாத மக்கள் கூட தவறாமல் தங்களது ஓட்டைப் போட முன் வரும் போது கமல்ஹாசனும், ரகுமானும் இப்படி தேர்தல் நேரத்தில் வாக்களிக்கத் தவறுவது தவறான முன்னுதாரணமாகவே அமையும். பல நட்சத்திரங்களை வைத்து வாக்களிக்க வாருங்கள் என்று விளம்பரப் படத்தை எடுத்த தேர்தல் ஆணையம், நல்லவேளையாக இவர்கள் இருவரை வைத்து எடுக்கவில்லை.