பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்நாட்டில் சினிமா நடிகர்கள் மீது மோகம் கொண்டு திரியும் எண்ணற்ற ரசிகர்களைப் பார்த்திருக்கிறோம். தங்களது சொந்த பணத்தில் தன் அபிமான நடிகர்கள் படம் வெளிவந்தால் பாலாபிஷேகம் செய்வதும், பந்தல் போடுவதும், தோரணம் கட்டுவதும் என செய்யும் ரசிகர்கள் தமிழ்நாட்டில் நிறையவே உண்டு. ஆனால், இந்த ரசிகர்களுக்காக இதுவரை எந்த ஒரு நடிகரும் தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்ததாக வரலாறே கிடையாது.
இன்றைய இளம் நடிகர்களான அஜித், விஜய் போன்றோர் ரசிகர்கள் செய்யும் எந்த விஷயத்தைப் பற்றியும் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அவர்களுக்கு தங்களது படங்கள் ஓட வேண்டும், என்ற மனோபாவமே மேலோங்கியிருக்கிறது.
ஆனால், தெலுங்கில் பாருங்கள், அஜித், விஜய்யைப் போன்ற முன்னணி நடிகரான மகேஷ்பாபு அவரது சொந்த ஊரான புர்ரிபள்ளத்தைத் தத்தெடுத்து அதை 'மாடல் கிராமம்' ஆக மாற்ற முயற்சி எடுத்து வருகிறார். அந்த ஊருக்கு சமீபத்தில் 1 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார்.
“புர்ரிபள்ளம் வந்தது சொந்த வீட்டுக்கு வந்த மிகவும் மகிழ்ச்சியான தருணம். என் மீது காட்டிய அன்புக்கும், பாசத்துக்கும் மிக்க நன்றி. இந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும், எனது ரசிகர்களுக்கும், தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும், போலீஸ், மீடியா அனைவருக்கும் நன்றி. இந்த நாளை மிகவும் சிறப்பான நாளாக மாற்றியிருக்கிறீர்கள். புர்ரிபள்ளம் கிராமத்தை ஒரு மாடல் கிராமம் ஆக மாற்ற அனைவரது உதவியையும் எதிர்பார்க்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மகேஷ்பாபுவிற்கு உள்ள அந்த எண்ணம் இங்குள்ள ஹீரோக்களுக்கும் வந்தால் நல்லதுதான்.