தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் மிக்கவர். கே.பாலச்சந்தர் மரணமடைவற்கு முன் தான் இயக்குவதற்காக “கடவுள் காண்போம் வா'' என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியிருந்தார். இந்த கதையை படமாக்க முயற்சித்தபோதுதான் அவரது மகன் கைலாசம் காலமானார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாக கே.பாலச்சந்தரால் அந்தப் படத்தை இயக்க முடியவில்லை. அதிலிருந்து சில மாதங்களுக்கு பிறகு அவரும் காலாமானார்.
கே.பாலச்சந்தர் எழுதிய அந்த கதையை சமுத்திரகனியிடம் படிக்க கொடுத்திருக்கிறார். அற்புதமான கதை, காலத்துக்கேற்ற கதை என்பதை அவர் உணர்ந்தார். தற்போது சமுத்திரகனியே பாலச்சந்தரின் கடைசி கதையை இயக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கான உரிமத்தை அவர் பாலச்சந்தர் குடும்பத்திடமிருந்து பெற்றிருக்கிறார். கிட்ணா படத்திற்கு பிறகு சமுத்திரகனி பாலச்சந்தர் கதையை தயாரித்து, இயக்குவார் என்று தெரிகிறது.