‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழில் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், மிருகம், சத்தம்போடாதே, தங்க மீன்கள் உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மப்ரியா. தென்னிந்திய மொழிகளில் சுமார் 50 படங்களில் நடித்தவர். அமெரிக்க பல்கலைகழகத்தில் தன்னுடன் படித்த ஜாஸ்மின் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஏற்கெனவே ஸ்டிக்கர் என்ற இந்திப் படத்தில் நடித்திருக்கிறார். இப்போது மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்கிறார். 3 முறை தேசிய விருது பெற்ற ரஞ்சித் பலிட் இயக்கும் தி ஆர்பன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் பெங்காலி மொழியிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. நஸ்ருதீன் ஷாவின் மகன் விவான் ஷா ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர மாளவிகா மேனன், கமாலினி முகர்ஜியும் நடிக்கிறார்கள். பத்மப்ரியா விவான் ஷாவுக்கு மனைவியாக நடித்துள்ளார்.
இதுதவிர தமிழில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்திலும் மலையாளத்தில் அயோப்பிண்ட புஷ்தகம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். “நான் மீண்டும் நடிக்க வந்திருப்பதை ஆச்சர்யமாக பார்க்க வேண்டாம். திருமணத்துக்கும், படத்தில் நடிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. திருமணத்துக்கு பிறகு பெண்கள் வேலைக்குச் செல்வதில்லையா அதுபோலத்தான் இதுவும்” என்கிறார் பத்மப்ரியா.