'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
இந்திய அளவில் இந்தி படங்கள்தான் அதிக பட்ஜெட்டில் தயாராகி வந்தன. தமிழில் ஷங்கர் இயக்கிய படங்களும் பின்னர் பாலிவுட் படங்களுக்கு இணையான பட்ஜெட்டில் தயாராகின. குறிப்பாக ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகி, இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படமானது. ஆனால் அதையடுத்து ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் 250 கோடியில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படமானது.
அதோடு, தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவான அப்படம் இந்தியா முழுக்க பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக, தென்னிந்திய நடிகர்கள் நடிப்பில் உருவான அப்படம், பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்து வசூலை வாரிக்குவித்தது. அதோடு, சில வெளிநாடுகளிலும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியான பாகுபலி, தற்போது பிரெஞ்சு மொழியில் வெளியாக தயாராகிக்கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் சரித்திர கதைகளுக்கு மவுசு இருந்து வருவதால் பிரான்ஸ் நாட்டிலும் பாகுபலி பெரிய அளவில் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.