பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவில் நடிகராக மட்டுமே இருந்து வந்த ஆர்யா, தான் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் விநியோகஸ்தரானார். அதைத் தொடர்ந்து தனது தம்பி சத்யா அறிமுகமான அமரகாவியம் படத்தை தயாரித்து தயாரிப்பாளராகி விட்டார். ஆனால் அப்படி அவர் தயாரித்த முதல் படமே தோல்வியாகி விட்டது. இருப்பினும் அதன்பிறகு தான் நடித்த வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தையும் தயாரித்து நடித்தார். ஆனால் அந்த படமும் தோல்விதான். அதனால், தமிழில் படம் தயாரிப்பதையே நிறுத்தி விட்டார்.
மேலும், தற்போது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் தனிக்காட்டு ராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவரிடம் கதை சொன்ன சில டைரக்டர்கள் ஆர்யாவை வைத்து படம் தயாரிக்க முன்னணி நிறுவனங்கள் முன்வராததால், அவரையே தயாரிப்பாளராகும்படி கேட்டுக்கொண்டார்களாம். அதற்கு, எனக்கும் தொடர்ந்து படம் தயாரிக்க ஆசைதான். ஆனால், ஏற்கனவே எடுத்த படங்கள் தோல்வியை தழுவியதால் இப்போதைக்கு சொந்தமாக படமெடுக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம். மேலும் தான் நடித்து வரும் படங்களும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியதால் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்த இப்போதைக்கு நடிப்பு என்ற முடிவில் மட்டும் தான் இருக்கிறாராம் ஆர்யா.