தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாய்ஸ் படத்தில் அறிமுகமான பரத், காதல் படத்திற்கு பிறகு கமர்சியல் வட்டத்திற்கு வந்தார். அதையடுத்து காதல், ஆக்சன் பலதரப்பட்ட கதைகளில் நடித்து வந்த அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தொய்வு நிலை ஏற்பட் டுள்ளது. அதன்காரணமாக தமிழை மட்டுமே நம்பாமல் மலையாள படங்களிலும் நடித்து வந்த பரத், தற்போது ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கி வரும் கடுகு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தேவயானியின் கணவர் இராஜகுமாரன் தான் ஹீரோ என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், கதைப்படி பரத், இராஜகுமாரன், விஜய் மில்டனின் தம்பி என 3 பேருக்குமே ஹீரோ வேடங்கள்தானாம். இதில் இராஜகுமாரன் கிராமங்களில் புலி வேஷம் போட்டு வீதிகளில் ஆடும் வேடத்தில் நடிக்க, பரத் கிராமத்து பாக்சராக நடித்துள்ளார். இவர் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பரத் நடிப்பதும் பாசிட்டீவான வேடம்தான் என்கிறார்கள்.
அதோடு, இந்த வேடத்துக்காக தனது உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருக்க வேண்டும் என்பதால், உடற்பயிற்சி கருவிகளை ஸ்பாட்டிலேயே கொண்டு வைத்திருந்து தினமும் காலை - மாலை வேலைகளில் உடற்பயிற்சி செய்து நடித்து வருகிறாராம் பரத்.