கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி படம் வெற்றி பெற்ற சில மாதங்களில் அருணா என்ற பெண்ணை 2012 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே பாலாஜி மோகன் தன்னுடைய மனைவியை பிரிந்துவிட்டார் என்று திரைத்துறையில் கிசுகிசுக்கப்பட்டது. அதை உண்மையாக்குவதுபோல் மீடியாக்களுக்கு ஒரு தகவலைக் கொடுத்திருக்கிறார் பாலாஜி மோகன்.
“ எனது நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், எனது விவாகரத்து குறித்து வதந்திகள், யூகங்கள் மூலம் நீங்கள் அறிந்துகொள்வதற்கு முன்பு நானே தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடைசி வரை சமரசத்திற்கு முயன்றும் பலனளிக்காத காரணத்தால், 3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்த கொண்டிருந்த நானும் எனது முன்னாள் மனைவியும், அதிகாரபூர்வமாக பரஸ்பரம் விவாகரத்துப் பெற்றிருக்கிறோம். சட்டரீதியான அனைத்து விஷயங்களும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டன. நாங்கள் அவரவர் பாதைகளில் பயணிப்பதற்கு இந்த ஆரோக்கியமான பிரிவே சிறந்த தீர்வு. தொடர்ந்து எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி!”
என்று தன்னுடைய திருமண பந்தம் முறிந்துவிட்ட தகவலை தானே வலிய ஊடகங்களுக்கு தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜிமோகன். இது ஒரு பக்கம் இருக்க, மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இந்த வருட இறுதியில் தொடங்க இருக்கிறார் பாலாஜி மோகன்.