'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி |
கடந்த வருடம் ஜனவரி மாதம் கேரளாவில் நடைபெற்ற 'ஐ' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம் மேடையிலேயே தன் ஆசை ஒன்றை தெரிவித்தார். அதாவது மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் என்பவரால் எழுதப்பட்டு அதிகம் விற்பனையான 'ஆடுஜீவிதம்' நாவலை படமாக எடுத்தால் அதில் தான் நடிப்பதாக கூறினார். ஆனால் அந்த நாவலை பிரபல மலையாள இயக்குனர் பிளஸ்சி படமாக இயக்கவிருப்பதாகவும் அதில் பிருத்விராஜ் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போது அது அதிகாரப்பூர்வமாக உறுதியும் செய்யப்பட்டு விட்டது.
ஆனால் அந்தப்படத்திற்கு முன், ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் மோகன்லாலை வைத்து தான் இயக்கிய 'தன்மாத்ரா' படத்தை இந்தியில் இயக்க பிளஸ்சி திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.. 'ஆடு ஜீவிதம்' நாவலை போலவே, விக்ரமை அதிகம் கவர்ந்தது தன்மாத்ரா படமும், அதில் நடித்த மோகன்லாலின் கேரக்டரும். இந்தப்படத்தில் அல்சீமர் என்கிற ஞாபக மறதி குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட மத்திய வயது நபராக அற்புதமாக நடித்திருந்தார் மோகன்லால்.
தமிழில் அந்தப்படத்தை ரீமேக் செய்தால் தான் நடிக்க தயாராக இருப்பதாகவும் சொல்லி வந்தார். இப்போது இப்படம் இந்தியில் ரீமேக்காகிறது.. இருந்தாலும் விக்ரம் இந்தியிலும் ஓரளவு அறிமுகம் ஆகி இருப்பதால் விக்ரமுக்கு இந்தி ரீமேக்கில் நடிக்க அழைப்பு அனுப்பியுள்ளாராம் இயக்குனர் பிளஸ்சி. விக்ரம் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.