டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து, விளையாட்டுப்போல இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அவரது மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் குடித்த மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கண்டுபிடித்த போலீசாரால் இன்னும் உண்மை குற்றவாளிகளை நெருங்கமுடியவில்லை. இதற்கு காரணமாக கலாபவன் மணியின் சினிமா நண்பர்கள் அதன்பின் மணியின் மாமனார் என சந்தேக வளையம் பெரிதாகிக்கொண்டு போனதே தவிர உண்மை குற்றவாளிகள் இன்னும் அகப்பட்ட பாடில்லை. இந்த நிலையில்தான் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் தனது அண்ணனின் மரணம் குறித்து சில திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “எனது அண்ணனின் மரணம் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்றுதான் கூறவேண்டும். இதன் பின்னணியில் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் தான் இருக்கின்றனர். எனது அண்ணன் அவர்களில் சிலருக்கு கடனாக கொஞ்சம் தொகை கொடுத்து உதவியிருந்தார். ஒருகட்டத்தில் ஏதோ ஒரு சொத்து ஒன்றை வாங்குவதற்கு பணம் தேவைப்படவே, அவர்களிடம் பணத்தை கேட்டிருக்கிறார். ஆனால் தங்களிடம் கொடுத்த பணத்தை கேட்கமாட்டார் என நினைத்த அவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக கலாபவன் மணியின் சினிமா தொடர்புகளை கத்தரித்தார்கள். இனி அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என செய்தி பரப்பினார்கள்.
அடுத்து அவரிடம் இருந்து எங்களை பிரித்தார்கள்.. அதனால் நாங்கள் சொல்வதை கேட்கும் நிலையில் எனது அண்ணன் இல்லை.. ஒரு கட்டத்தில் அண்ணனை திட்டமிட்டு கொன்றும் விட்டார்கள்.. அவர் தற்கொலை பண்ணிக்கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. காரணம் அவரது மகளின் எதிர்காலம் குறித்த பல கனவுகள் அவருக்கு இருந்தன” என வேதனையுடனும் கோபத்துடனும் கூறியுள்ளார் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.