Advertisement

சிறப்புச்செய்திகள்

‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

“திட்டமிட்ட கொலை” ; கலாபவன் மணியின் சகோதரர் பகீர் தகவல்..!

06 மே, 2016 - 17:21 IST
எழுத்தின் அளவு:
Kalabhavan-Manis-dead-is-Preplanned-Murder-says-Kalabhavanmani-Brother

மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து, விளையாட்டுப்போல இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அவரது மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் குடித்த மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கண்டுபிடித்த போலீசாரால் இன்னும் உண்மை குற்றவாளிகளை நெருங்கமுடியவில்லை. இதற்கு காரணமாக கலாபவன் மணியின் சினிமா நண்பர்கள் அதன்பின் மணியின் மாமனார் என சந்தேக வளையம் பெரிதாகிக்கொண்டு போனதே தவிர உண்மை குற்றவாளிகள் இன்னும் அகப்பட்ட பாடில்லை. இந்த நிலையில்தான் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் தனது அண்ணனின் மரணம் குறித்து சில திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.


இதுபற்றி அவர் கூறும்போது, “எனது அண்ணனின் மரணம் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்றுதான் கூறவேண்டும். இதன் பின்னணியில் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் தான் இருக்கின்றனர். எனது அண்ணன் அவர்களில் சிலருக்கு கடனாக கொஞ்சம் தொகை கொடுத்து உதவியிருந்தார். ஒருகட்டத்தில் ஏதோ ஒரு சொத்து ஒன்றை வாங்குவதற்கு பணம் தேவைப்படவே, அவர்களிடம் பணத்தை கேட்டிருக்கிறார். ஆனால் தங்களிடம் கொடுத்த பணத்தை கேட்கமாட்டார் என நினைத்த அவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக கலாபவன் மணியின் சினிமா தொடர்புகளை கத்தரித்தார்கள். இனி அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என செய்தி பரப்பினார்கள்.


அடுத்து அவரிடம் இருந்து எங்களை பிரித்தார்கள்.. அதனால் நாங்கள் சொல்வதை கேட்கும் நிலையில் எனது அண்ணன் இல்லை.. ஒரு கட்டத்தில் அண்ணனை திட்டமிட்டு கொன்றும் விட்டார்கள்.. அவர் தற்கொலை பண்ணிக்கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. காரணம் அவரது மகளின் எதிர்காலம் குறித்த பல கனவுகள் அவருக்கு இருந்தன” என வேதனையுடனும் கோபத்துடனும் கூறியுள்ளார் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in