'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
பாலகிருஷ்ணாவின் 100வது படமான கௌதமிபுத்ர சதர்கனி படத்தின் பூஜை முடிந்தது முதல் படக்குழு ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாகியுள்ளனர். விரைவில் மொரோகோவில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் பஸ்ட் பிரேம் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தார் தயாரிக்கின்றனர். வரலாற்று திரைப்படமான இப்படத்திற்கென ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணியில் இப்படத்தின் கலை அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன் தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. செப்டம்பர் வரை நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்காததால் வேறு நடிகையை அனுக க்ரிஷ் திட்டமிட்டுள்ளாராம். நயன்தாரா, அனுஷ்காவிற்கு அடுத்து நாயகி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் ஸ்ருதிஹாசன். க்ரிஷ் மற்றும் படக்குழுவினர் நடிகை ஸ்ருதிஹாசனை இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனராம்