தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் சதுரம். இந்தப் படம் இரண்டு பாகமாக தயாராகி உள்ளது. வித்தியாசமாக முதலில் இரண்டாம் பாகத்தையும், பின்னர் முதல் பாகத்தையும் வெளியிடுகிறார்கள். நாக்அவுட் எண்டர்டெயின்மெண்ட், கிரேட் மேட் ஸ்டூடியோ இணைந்து தயாரிருக்கும் இந்தப் படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார். ரோஹித் நாயர், சுஜா வாருணி, கவுசிக், ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் என்ற செய்திகள் வெளிவந்தது. இதனை இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சா என்ற ஹாலிவுட் படத்தின் கதையை முறைப்படி உரிமம் பெற்று படமாக எடுத்திருக்கிறோம். அப்படியே எடுக்காமல் நம் நாட்டுக்கு ஏற்ற மாதிரியான சில மாறுதல்களை செய்திருக்கிறோம். எல்லா ஹீரோயிச கதைகளும் சமூகத்துக்காக தீய சக்திகளை எதிர்த்து போராடுகிற கதைதான். இதுவும் அப்படித்தான், ஆனால் வில்லன்களும் புதிதாக இருப்பார்கள். அதை எதிர்த்து போராடுகிற ஹீரோவின் போராட்டமும் புதிதாக இருக்கும். இரண்டு நோக்கத்துக்காக ஹீரோ போராடுகிறார். அதுதான் இரண்டு பாகமாக தயாராகி உள்ளது. இரண்டாம் பாகம் வேகமாக முடிந்து விட்டதால் அதனை முதலில் வெளியிடுகிறோம். முதல் பாகத்தை பின்னர் வெளியிடுகிறோம். என்கிறார் இயக்குனர் ராதாகிருஷ்ணன்.