பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் எஸ்-2, இந்தியில் யாரா, தெலுங்கில் பிரேமம் என மூன்று மொழிப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக்கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். மேலும், இதற்கு முன்பு தெலுங்கு, இந்தியில் கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்த ஸ்ருதி, இந்த புதிய படங்களில் பர்பாமென்ஸ்க்கு முக்கியத்துவமுள்ள ரோல்களில் நடித்து வருகிறார். அதேபோல் சூர்யாவின் எஸ்-3யில் சிபிஐ போலீசாக நடிக்கிறார். இந்த நிலையில், தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் கமிட்டாகியிருக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக சமந்தா, காஜல்அகர்வால், தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் போட்டிக்கோதாவில் இறங்கியபோதும், ஸ்ருதிஹாசனுக்கு எளிதாக அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காரணம், இதற்கு முன்பு பவன்கல்யாண்-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்த கப்பார் சிங் படம் சூப்பர் ஹிட்டானது. அதோடு அவர்களது காம்பினே சனும் தெலுங்கு ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதனால், பவன் கல்யாண் தரப்பில் இருந்தும் ஸ்ருதியின் பெயரை பரிந்துரை செய்யப்பட்டதாம். ஆக, அனைத்து போட்டி நடிகைகளையும் பின்தள்ளி விட்டு பட்டியலில் எளிதாக இடம் பிடித்து விட்டார் ஸ்ருதிஹாசன்.