டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக இருந்த திரு என்கிற திருநாவுக்கரசு மகளிர் மட்டும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனார். அதன்பிறகு கமல்ஹாசனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகி ஹேராம், ஆளவந்தான், காதலா காதலா, படங்களை ஒளிப்பதிவு செய்தார். அதன் பிறகு இந்திக்கு சென்றவர் அங்கு கரம் மசாலா, பூல்கபுல்யா, ஆக்ரோஷ், கிரிஷ் 3 உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களில் பணியாற்றினார்.
தற்போது 6 வருட இடைவெளிக்கு பிறகு 24 படம் மூலம் தமிழக்கு வந்திருக்கிறார். சூர்யாவைத் தவிர வேறு யாரும் இந்த படத்தை தயாரித்திருக்க முடியாது. அவர் மீதுள்ள நம்பிக்கையில்தான் இந்த படத்தில் பணியாற்றினேன் என்கிறார் திரு.
அவர் மேலும் கூறியதாவது: ஏன் 6 ஆண்டு காலம் தமிழில் படம் செய்யவில்லை என்று கேட்கிறார்கள். இந்தியில் பணியற்றிகொண்டிருந்ததால் நேரமின்மை ஒரு காரணம் என்றாலும் நல்ல படத்துக்காக காத்திருந்தேன் என்பதும் உண்மை. அந்த ஏக்கம் 24ல் நிறைவேறியுள்ளது. இதற்கு முன் விக்ரம் குமார் அவர் படங்களுக்கு என்னை அழைத்த போதெல்லாம் அவருடன் பணியாற்ற நேரம் அமையவில்லை. சூர்யா தவிர வேறு யார் தயாரிப்பாளராக இருந்தாலும் 24 இவ்வளவு சுலபமாக முடிவடைந்து இருக்காது. நல்ல நிலையில் தடையின்றி படப்பிடிப்பு நடத்த படப்பிடிப்பு குழுவுக்கு என்ன தேவைப்படுகிறதோ அவை அனைத்தும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் ஒருங்கிணைத்து அளித்து ஊக்குவித்தார்.
எல்லா ஹீரோக்களுமே தங்களை சினிமாவுக்காக அர்ப்பணித்து கொண்டவர்கள்தான், என்றாலும் சூர்யா இன்னும் ஒரு படி மேல் தனது டெடிக்கேசனை ப்ராக்டிக்கலாகவும் செயல்படுத்துவார் வில்லன் “ஆத்ரேயா''. கதாப்பாத்திரத்தை மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்தார்.
இன்று சினிமாவில் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டது. இது சினிமாவுக்கு மிகவும் பெரிய சவாலாகவும் உள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக கதைகள் அமைவதில்லை. அந்த தொழில்நுட்பத்தை நன்கு செயல்படுத்த உதவும் விதமாக அமைந்தது 24 கதைக்களம். இயக்குநர் விக்ரம் குமாரின் நுணுக்கமான திரைக்கதை சிறப்பு அம்சமாக அமைந்தது என்கிறார் திரு.