டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கமல் நடித்த சத்யா, ரஜினி நடித்த பாட்ஷா என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சுரேஷ்கிருஷ்ணா. குறிப்பாக, இவரது இயக்கத்தில் நடித்த பாட்ஷாதான் தான் நடித்ததில் மிகவும் பிடித்தமான படம் என்று ரஜினி இப்போதுவரை கூறி வருகிறார். அதோடு இந்த படம் ரஜினி படங்களில் டாப்-10 பட வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
இப்படி மெகா நடிகர்களை வைத்து மெகா படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா-2 கதையை ரஜினியிடம் சொன்னபோது, அவர் நடிக்க விரும்பவில்லை. அதனால் பின்னர் அந்த முயற்சியை கைவிட்ட அவர், சின்னத்திரையில் சீரியல்கள் இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் சேனலுக்காக, ஹிட்லர் எங்கிருந்தோ வந்தான் என்றொரு படத்தை இயக்கியுள்ளார் சுரேஷ் கிருஷ்ணா.
இந்த படத்தில் லீடு ரோலில் தேவயானி நடித்துள்ளார். அவருடன் டெல்லி கணேஷ், பரத்கல்யாண் போன்ற நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். 35 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த ஹிட்லர் எங்கிருந்தோ வந்தான் படத்தை ஒன்பதே நாட்களில் படமாக்கி விட்டாராம் சுரேஷ்கிருஷ்ணா. இப்படம் மே மாதம் 29-ந்தேதி ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.