தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி எனும் பிரம்மாண்டத்தின் வாயிலாக இந்திய திரை உலகில் அறியப்படும் இயக்குனராகி விட்டார் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி. தற்போது இன்னும் பிரம்மாண்டமாக பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதில் தீவிரம் காடி வருகின்றார். இந்நிலையில், ராஜமௌலி இயக்குனராக திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நான் ஈ, படத்தில் நடிகர் நாணியை இயக்கிய ராஜமௌலி, நாணி நடிக்கும் புதிய படத்தில் இயக்குனராக சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
“உய்யலா ஜம்பலா” படப்புகழ் இயக்குனர் வர்மா இயக்கும் புதிய படத்தில் நாணி உதவி இயக்குனர் வேடம் ஏற்று நடிக்கவுள்ளாராம். நாணி உதவி இயக்குனராகவே தனது திரை உலக பயணத்தை துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ராஜமௌலி இயக்குனராக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஜென்டில்மேன் படத்தில் நடித்து வரும் நாணி அப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் பிசியாகவுள்ளார். இப்படம் மே இறுதியில் அல்லது ஜூனில் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது