'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 'இரு முகன்' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருக்கின்றன. அதாவது கடைசி ஷெட்யூல் தற்போது சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக சுரங்கம் போன்றதொரு பிரம்மாண்ட செட் உருவாக்கியுள்ளார்களாம். 'இரு முகன்' படத்தை ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தார்கள். தற்போது அந்தத் திட்டத்தில் மாற்றம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் திட்டமிட்ட தேதியில் முடிவடையாமல் இழுத்துக் கொண்டே போகிறதாம். எனவே, சுதந்திர தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இது ஒருபுறமிருக்க, விக்ரம் நடிக்கவிருக்கும் 'கருடா' படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் துவங்குகிறது. விஷால் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' படத்தை இயக்கிய திரு, 'கருடா'வை இயக்குகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கருடா படத்தின் கதைக்களம் பாகிஸ்தானைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாம்.
பாகிஸ்தானிலேயே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு அதற்காக முயற்சி செய்தனர். அனுமதி கிடைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, கிட்டத்தட்ட பாகிஸ்தானைப்போலவே ராஜஸ்தானில் உள்ள சில இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்களாம். 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்கு 'கருடா'வை வெளியிட உள்ளனர்.