தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விதார்த் நடித்த ‛ஆள்' படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன், தற்போது இயக்கி உள்ள படம் ‛‛மெட்ரோ''. பாபி சிம்ஹா, சிரிஷ், ப்ரீத்தி நடித்துள்ளனர். ‛ஆள்' தனித்து வரும் மனிதர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து காரியம் சாதிக்கும் ஒரு சமூக விரோத கும்பல் பற்றிய படம். மெட்ரோ படம் ரோட்டில் நடக்கும் செயின் பறிப்பு சம்பவத்திலிருந்து சர்வதேச தங்க கடத்தல் வரைக்கும் உள்ள நெட் ஒர்க் பற்றிய படம்.
படத்தை முடித்து விட்டு தணிக்கைக்கு அனுப்பினார் ஆனந்த் கிருஷ்ணன். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது, செயின் பறிப்பு சம்பவங்களை நிறைய காட்டுகிறீர்கள். அதை பார்த்து செயின் பறிக்கும் முறைகளை சமூக விரோதிகள் கற்றுக் கொள்ளக்கூடும். இதனால் செயின் பறிப்பு குற்றங்கள் அதிகரிக்கும் என்று கூறி படத்தை வெளியிட தடை விதித்தது.
“நிஜத்தில் பல இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. எதுவுமே கற்பனை சம்பவங்கள் அல்ல. மக்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகத்தையும். அந்த மோகத்தையே மூலதனமாக கொண்டு சர்வதேச அளவில் செயல்படும் நெட் ஒர்க்கையும் வெளிச்சம் போட்டு காட்டும் படமாக உருவாக்கி இருக்கிறோம் என்று படத்தரப்பில் விளக்கம் கொடுத்தும் தணிக்கை குழு ஏற்கவில்லை. இதனால் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.