இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கொம்பன், வேதாளம் படங்களுக்குப்பிறகு ஜெயம்ரவியுடன் மிருதன் படத்தில் நடித்த லட்சுமிமேனனுக்கு அதையடுத்து படங்கள் இல்லை. அதனால் கேரளத்துக்கு திரும்பிச்சென்று விட்டார். அதோடு அடுத்தபடியாக தனக்கு பெரிய ஹீரோக்களின் படவாய்ப்புகள் வரும் என்கிற நம்பிக்கையும் அவருக்கு பெரிதாக இல்லையாம். ஏதாவது படங்கள் வந்தால் பார்க்கலாம் என்கிற மனநிலையில்தான் இருந்து வந்தாராம். ஆனால் அந்த நேரம்தான் தனுஷ், விஜயசேதுபதி போன்ற ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து லட்சுமிமேனனை தேடிச்சென்றிருக்கிறது.
இதை துளியும் எதிர்பார்க்காத லட்சுமிமேனன், அந்த செய்தியைக்கேட்டதும் இன்ப அதிர்ச்சியில் சிலிர்த்துப் போனாராம். அதோடு, அந்த படங்களின் கதை சொல்ல வேண்டுமா? என்று இங்கிருந்தபடியே சம்பந்தப்பட்டவர்கள் லட்சுமிமேனனைக் கேட்டதற்கு, கதையெல்லாம் சொல்ல வேண்டாம். நீங்கள் சொல்லும் இரண்டு நடிகர்களுமே பெரிய நடிகர்கள். அதோடு நல்ல கதைகளில் மட்டும்தான் நடிப்பார்கள். அதனால் நான் கதை கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறி விட்டாராம்.