விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
கதாநாயகி என்கிற ட்ராக்கில் இருந்து விலகி எந்தமாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்கும் ஒரு நடிகையாக தற்போது தனது ரூட்டை மாற்றியுள்ளார் திரிஷா. அதோடு கதையின் நாயகியாகவும் உருவெடுத்து நிற்கிறார். அந்த வகையில், சுந்தர்.சி இயக்கிய அரண்மனை-2 படத்தில் முதன்முறையாக பேயாக நடித்த திரிஷா, தற்போது நாயகி படத்திலும் ஹாரர் கதையில் நடித்திருக்கிறார். அதோடு முதன்முறையாக இந்த படத்தில் இரண்டு வேடங்களிலும் நடித்திருக்கிறார் திரிஷா.
இந்த நிலையில், அவரது கைவசம் சில மெகா படங்கள் இருப்பதால் அவரது மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது. அதனால், அரசாங்கம், மதுர, சாக்லேட் படங்களை இயக்கிய மாதேஷ் இயக்கும் புதிய படத்திலும் ஹாரர் கதையில் நிடிக்கிறார் திரிஷா. இதற்கு முன்பு நடித்த பேய் படங்களை விட இந்த படத்தில் அதிரடியான பேயாக நடிக்கிறாராம் அவர். பிரமாண்டமாக தயாராகும் இந்த படமும் நயன்தாரா நடித்த மாயா படத்தைப்போன்று கதாநாயகியை மையப்படுத்திய கதையில் உருவாகிறது.