மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, "பார்த்தோம் பழகினோம்" என்ற புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். டைரக்டர் ராசு.மதுரவன் இயக்கும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமை பொங்க நண்பர்களிடம் கூறி வருகிறார் மயில்சாமி. ராசு.மதுரவன் என்றாலே குடும்ப செண்டிமென்ட், அழுகாச்சி என்றுதான் படம் முழுக்க இருக்கும். அந்த செண்டிமென்ட் காட்சிகளையெல்லாம் தவிர்த்துவிட்டு காதலை சொல்லும் படமாக பார்த்தோம் பழகினோம் படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க தன் மகனுக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றி மயில்சாமி கூறுகையில், அஜீத் சார் ஒருமுறை அன்புவை பார்த்துவிட்டு, தம்பி அழகாயிருக்கார். நல்ல படமா தேர்ந்தெடுத்து நடிக்க வைங்க என்று சொன்னார். ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன் போன்ற முன்னணி இயக்குனர்களும் வாய்ப்பு கொடுப்பதாக சொல்லியிருக்காங்க. அந்த நேரத்தில்தான் ராசு.மதுரவன், என் மகனை பார்த்து, என் படத்தில் நடிக்க வைக்கலாமே என்று கேட்டார். நான் துண்டு துக்கடா கேரக்டர் பண்ணிட்டு இருக்கும்போதே எனக்கு வெயிட்டான ரோல் கொடுத்து நடிக்க வைத்தவர் அவர். அதனால் சட்டுன்னு சரி சொல்லிட்டேன், என்றார்.
லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அன்புவின் உண்மையான பெயர் அருமை சந்திரன். சினிமாவுக்காக அன்பு என பெயரை மாற்றியிருக்கும் தன் மகன், படிப்பிலும் படு சுட்டி என்று பெருமிதம் பேசுகிறார் மயில்சாமி.