பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த ஏப்-25ஆம் தேதி, 29 வயதே ஆன மலையாள தயாரிப்பாளரான அஜய்கிருஷ்ணன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியை வெளியிட்டிருந்தோம்.. அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படாத சூழலில் நேற்று அவரது காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மலையாள திரையுலகில் இன்னும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.. அவரது காதலியின் பெயர் வினீதா நாயர்.. அவருக்கும் வயது 28 தான்.
பெங்களூருவில் பேஷன் டிசைனிங் படித்து முடித்த வினீதா கேரளாவில் நல்ல வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருந்த சூழலில் தான் அஜய் கிருஷ்ணனுடன் நட்பு ஏற்பட்டதாம். அஜய் கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்ட நாளில் இருந்து, வினீதா நாயர் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதனாலேயே இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அஜய் கிருஷ்ணனின் தற்கொலைக்கு காரணமாக பைனான்ஸ் பிரச்சனை இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது 'அவருடே ராவுகள்' என்கிற படத்தை இவர் தயாரித்து வந்தார். உன்னிமுகுந்தன், ஆசிப் அலி, ஹனிரோஸ், லேகா, முகேஷ் என பிரபலமான நட்சத்திரங்கள் தான் இந்தப்படத்தில் நடித்து வந்தனர். பிலிப்ஸ் அன்ட் மங்கி பெண் இயக்குனர்களில் ஒருவரான சனில் முகமதுதான் இந்தப்படத்தை இயக்கி வந்தார். படம் நன்றாக வரவில்லை என தெரிந்துகொண்டதாகவும் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்த அவர் இந்தப்படமும் ஓடாமல் இன்னும் கடனாளி ஆகிவிடுவோமோ என நினைத்து அந்த பயத்தில் தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் படத்தின் இயக்குனர் அந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை என மறுத்து வந்தார். இப்போது தயாரிப்பாளரின் காதலியும் தற்கொலை செய்துகொண்டதால், இவர்கள் இருவருக்கும் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் இந்த தற்கொலைகள் நிகழ்ந்திருக்கலாமோ என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.