சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அமீர்கானை சந்தித்த சிறுவன் ஒருவன் மரணத்தை தழுவியது அமீர்கானை வருத்தப்பட வைத்துவிட்டது. ப்ரோகேரியா என்பது சிறுவயதிலே வயதானவர்களை போல தோற்றத்தை கொண்டுவந்துவிடும் வித்தியாசமான நோய். இன்னும் சரியாக சொன்னால் அமிதாப் 'பா' படத்தில் ஏற்று நடித்திருந்தாரே அது இந்த நோயால் பாதிக்கப்பட்ட கேரக்டரைத்தான் பிரதிபலித்தது.. அப்படி ப்ரோகேரியா என்கிற நோயால் பாதிக்கப்பட்ட நிகால் பிட்லா என்கிற பதினான்கு வயது சிறுவன் ஒருவன் நான்கு மாதங்களுக்கு முன் அமீர்கானை சந்திக்க வேண்டும் என தனது பேஸ்புக் பக்கத்தில் விருப்பம் தெரிவித்திருந்தான்.
இது அவனுடையை புகைப்படத்துடன் மாறி மாறி ஷேர் செய்யப்பட்டு இறுதியில் அமீர்கானின் கவனத்துக்கும் வந்தது. உடனே அந்த சிறுவனை வரவழைத்து சந்தித்து அவனுடன் சில மணி நேரங்கள் செலவிட்டு அவனது ஆசையை தீர்த்து வைத்தார் அமீர்கான். இந்த சந்திப்பின்போது தான் வரைந்திருந்த பிள்ளையார் படத்தை அமீர்கானுக்கு பரிசளித்தான் அந்த சிறுவன். அந்த சிறுவனுக்கு மறக்கமுடியாத நாளாக அது அமைந்துவிட்டது. ஆனால் இப்போது நோயின் தீவிரம் தாங்கமுடியாமல் நேற்று இரவு அந்த சிறுவன் மரணம் அடைந்துவிட்டான்.. தனது வாழ்நாளில் மறக்கமுடியாத அந்த ரசிகனின் மரணம் அமீர்கானை சோகத்தில் ஆழ்த்திவிட்டதாம்.