தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
26 வருடங்களுக்கு முன் தமிழில் மம்முட்டி நடிப்பில் நேரடியாக வெளியான முதல் படம் 'மௌனம் சம்மதம்'. இந்தப்படத்தில் கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்ட ஜெய்சங்கரை நிரபராதி என நிரூபித்து யாரும் எதிர்பாராத விதமாக உண்மை கொலையாளியையும் கண்டுபிடிக்கும் லாயராக மம்முட்டி நடித்திருந்தார் மம்முட்டி. புலன் விசாரணை படங்களில் இரும் கூட முதல் இடத்தில் உள்ள படமான இந்தப்படத்தை மலையாள இயக்குனர் மது இயக்கியிருந்தார்.. பிரபல கதாசிரியர் எஸ்.என்.சுவாமி கதை எழுதியிருந்தார். இவர்கள் இருவரும் தான் மம்முட்டி நடித்த 'ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு' படத்தின் நான்கு பாகங்களும் உருவாக்க காரனமானர்வர்கள்..
ஆனால் மிக திறமையான இயக்குனர் என பெயர்பெற்ற இயக்குனர் மது கடந்த நான்கு வருடங்களாக படம் இல்லாமல் அல்லது இயக்காமல் இருக்கிறார். மம்முட்டி படம் மூலமாகவே சரியாக 30 வருடங்களுக்கு முணர் அறிமுகமான மது, மம்முட்டியை வைத்து 11 படங்களும் சுரேஷ்கொபியை வைத்து 9 படங்களும், மோகன்லாலை வைத்து 5 படங்களையும் இயக்கியுள்ளார். அதிலும் மோகன்லால் நடித்த இருபதாம் நூற்றாண்டு படம் இந்த 21ஆம் நூற்றாண்டில் எடுத்தாலும் ஹிட்டாக கூடிய கதை.. மோகன்லால் நடித்த 'மூணாம் முறை' படம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத த்ரில்லர்.. இத்தனை சுவாரஸ்யமான படங்களை இயக்கிய இயக்குனர் மது மீண்டும் திரும்ப வருவது, புலன் விசாரணை படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு போனஸ் கிப்ட் தான்.
அவரை மீண்டும் ஜெயிக்க வைப்பதற்காகவே இப்போது சிபிஐ பட வரிசையில் ஐந்தாம் பாகத்திற்கான கதையை இன்றைய டெக்னாலஜியை பயன்படுத்தி ரொம்பவே த்ரில்லிங்காக உருவாக்கி இருக்கிறாராம் அவரது நலம் விரும்பியான கதாசிரியர் எஸ்.என்.சுவாமி.. வழக்கமாக ஒரு கொலை வழக்கை சிபிஐ ஆபீசரான மம்முட்டி துப்பறிந்து இறுதியில் குற்றவாளியை கண்டுபிடிப்பார்.. நான்கு படங்களிலும் அதுதான் நடந்தது.. ஆனால் இந்த 5ஆம் பாகத்தில் குற்றவாளியை கண்டுபிடித்தாலும் அவனை நெருங்குவதிலும் சட்டத்தின் பிடியிலும் அவனை சிகவைப்பதிலும் மிகுந்த நெருக்கடி இருக்குமாம் மம்முட்டிக்கு.. இந்த சவாலை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதையாம். விரைவில் இதப்படம் தொடங்கப்பட்ட இருக்கிறது.. இந்தப்படத்தின் மூலம் இயக்குனர் மது மீண்டும் லைம்லைட்டுக்கு திரும்புவார் என நம்புவோம்.