ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோதே ராஞ்சனா இந்தி படத்தில் நடித்தார் தனுஷ். அந்த படம் 100 கோடி வசூல் சாதனை புரிந்தது. அதையடுத்து ஷமிதாப் படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார். அந்த படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்தபோது நடிப்பு குறித்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டதாக கூறும் தனுஷ், இப்போது அதைத்தான் தான் பின்பற்றி வருவதாக சொல்கிறார்.
அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஷமிதாப் படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிப்பதற்கு முன்பு ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் அவரோ எளிமையாக பழகினார். என் விசயங்களில் துளியும் தலையிடவில்லை. அதனால் எனக்கான தைரியம் அதிகமானது. மேலும், தனது வேலைகளில் ரொம்ப கவன மாக இருந்தார். தினமும் நாங்களெல்லாம் மேக்கப் போடுவதற்கு முன்பே அவர் கேமரா முன்பு வந்து நின்று ரிகர்சல் பார்த்துக்கொண்டிருப்பார். தன்னை விட ஜூனியர்கள் இன்னும் ஸ்பாட்டுக்கு வரவில்லையே என்பது பற்றி எதுவும் பேசமாட்டார். தனது வேலையில் மட்டுமே கவனமாக இருப்பார்.
மேலும், காட்சிகளில் யதார்த்தம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக எந்த மாதிரி காட்சிகளில் நடிக்கிறாரோ அதற்கேற்ப தன்னை முழுசாக மாற்றிக்கொண்டார். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அதுதான் அவரை மிகப்பெரிய நடிகராக்கியிருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அதனால் நான் இப்போது அவரைத்தான் பாலோ பண்ணுகிறேன். ஸ்பாட்டில் நடிப்பு தவிர வேறு எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. என் வேலை உண்டு நான் உண்டு என்றிருக்கிறேன் என்கிறார் தனுஷ்.