பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தெலுங்கு திரை உலகில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் ஜெகபதி பாபு, விஜய்யின் 60வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மலையாளத்தில் புலிமுருகன் படத்தின் வாயிலாக அறிமுகமாகின்றார். இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வரும் ஜெகபதி பாபு யோகா குறித்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, யோகாவின் பயன்பாடு குறித்தும் பேசியுள்ளார். ஜெகபதி பாபு கூறுகையில், யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்படுகின்றது. மேலும் தான் உடல் நலம் குன்றி இருந்த போது, யோகா செய்ததால் விரைவில் குணமடைய முடிந்தது என்றும் உடலும் மனதும் ஆரோகியமாக இருக்க அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்றும் ஜெகபதி பாபு கூறியுள்ளார்.