சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்ய தவறியதை செய்த வீரர் விஷால் என்று பெப்ஸி விழாவில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறு: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் சிறப்பு மேதினவிழா கொண்டாடப்பட்டது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்தாத்ரேயா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது... இங்கே குழுமியிருக்கும் பெப்ஸி குடும்பத்தினரே, இங்கே மத்திய அமைச்சர் வந்திருக்கிறார். அவரிடம் இக்கட்டான நேரத்தில் கோரிக்கைகள் வைத்திருக்கிறீர்கள். இது இக்கட்டான நேரமாக இருக்கலாம். ஆனால் வைக்கப்பட்டவை நியாயமான கோரிக்கைகள் தான். இப்போது வைக்கப்பட்டது, சாதகமான அரசியல் சூழல் என்பதால் அல்ல. இவை பலநாள் காத்துக் கொண்டிருக்கும் கோரிக்கைகள்தான். அமைச்சர் அவர்களே நீங்கள் இந்தக் கோரிக்கைகளை என்று வேண்டுமானாலும் நிறைவேற்ற முடியும். தயவு செய்து நிறைவேற்ற செய்யுங்கள்.
இத்துடன் இன்னொரு கோரிக்கையையும் சேர்த்து வைக்கிறேன். அறிவுசார் சொத்துரிமையான இண்டலக்சுவல் பிராபர்டி ரைட்ஸைப் பதிவு செய்ய டில்லி வரை நாங்கள் போக வேண்டியிருக்கிறது. இங்கேயும் இண்டலக்சுவல் இருக்கிறார்கள்.இங்கேயும் இண்டலக்சுவல் பிராபர்டி இருக்கிறது. அதற்கு இங்கேயே தனியாக ஒரு அலுவலகம் இருக்க வேண்டும். இதை என் கோரிக்கையாக அல்ல உரிமைக்குரலாக சொல்கிறேன்.
நானும் ஒரு தொழிலாளி
தொழிலாளர்களுக்கான தொழில்நுட்ப திறன் பயிற்சித்திட்டத்தை துரிதப்படுத்தும் கடமை எனக்கு இருக்கிறது. நான் இங்கே வந்திருப்பது எனக்கு கொடுக்கப்பட்ட பட்டங்களால் அல்ல. என்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது என்னுள் இருக்கும் தொழிலாளி உழைப்பாளி என்பது தான். நானும் ஒரு தொழிலாளி தான் கமல்ஹாசன் என்கிற நட்சத்திரத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது கமல்ஹாசன் என்கிற தொழிலாளி மட்டும்தான். அதன்மூலம்தான் என் நிறுவனமே இயங்கி வருகிறது.
வீரன் விஷால்
இது வாழ்த்து மேடை இல்லை என்றாலும் இதைச் சொல்ல வேண்டும். நாங்கள் நாற்பது ஆண்டுகளாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் செய்யத் தவறியதை விஷால் குழுவினர் செய்து காட்டினார்கள். நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் என்கிற பட்டத்தை விஷாலுக்குக் கொடுத்தால் தவறில்லை. நாங்கள் செய்யவில்லை. நீங்கள் செய்தீர்கள்.எங்களுக்கு சட்டை அழுக்காகி விடுமோ என்கிற பயம் இருந்தது, ஆனால் சட்டையே இல்லாமல் போய்விடுமோ என விஷால் குழுவினர் இறங்கினார்கள். செய்து காட்டினார்கள். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.