'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் 'மாஸ்கோவின் காவிரி', 'பாணா காத்தாடி', 'விண்ணைத்தாண்டி வருவாயா' உள்பட சில படங்களில் நடித்து விட்டு தெலுங்கிற்கு சென்றார். அதையடுத்து சூர்யா நடித்த அஞ்சான் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதோடு அந்த படத்தில் டூ-பீஸ் நடிகையாக உருவெடுத்து இளைஞர் சமுதாயத்தை சூடேற்றினார் சமந்தா. அப்போது சூடு பிடித்த அவரது மார்க்கெட் இப்போது தெறி வரை ஏறுமுகத்தில்தான் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சூர்யாவுடன் மீண்டும் அவர் நடித்துள்ள 24 படம் விரைவில் திரைக்கு வருகிறது.
மீண்டும் சூர்யாவுடன் நடித்திருப்பது பற்றி சமந்தா கூறும்போது, நான் படிக்கிற காலத்தில் எனது வீட்டில் ஆங்கில படங்களைத்தான் அதிகமாக பார்ப்பார்கள். அதனால் தமிழ்ப்படங்களை பார்க்கிற சூழ்நிலை இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில், சூர்யா-ஜோதிகா நடித்த காக்க காக்க படத்தை பார்த்தேன். நான் பார்த்த முதல் தமிழ் படம் அதுதான். அதிலிருந்து நான் சூர்யாவின் ரசிகையாகி விட்டேன். ஆனால் அவருடன் நடிப்பேன் என்றெல்லாம் துளிகூட நினைத்தில்லை.
ஆனால் இப்போது நடிகையாகி சூர்யாவுடன் 2 படங்களில் நடித்து விட்டேன் அதை நினைக்கையில் ரொம்ப ஆச்சர்யமாகவும், சந்தோசமாகவும் உள்ளது. அதிலும் அஞ்சான் படத்தை விட 24 படத்தில் நான் சிறப்பாக நடித்திருப்பதாக அவரே சொன்னார். அது இன்னொரு சந்தோசத்தை கொடுத்துள்ளது. அதோடு சூர்யாவுடன் நான் இணைந்து நடித்துள்ள இந்த படம் வெற்றி பெற்று தொடர்ந்து நாங்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாகி உள்ளது என்கிறார் சமந்தா.