இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவாகும் இப்படம் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிக்க சாய் தரண் தேஜ் விருப்பம் தெரிவித்துள்ளார். மெகா ஸ்டார் குடும்ப வாரிசும் வளர்ந்து வரும் நடிகருமான சாய் தரண் தேஜ் அண்மையில் சிரஞ்சீவியின் 150வது படபூஜையில் கலந்து கொண்டார். மேலும் தற்போது தனது சுப்ரீம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் சாய் தரண் சிரஞ்சீவியின் 150வது படத்தில் சிறிய வேடத்திலாவது நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். மே 5ல் திரைக்கு வரும் சுப்ரீம் படத்தில் சாய் தரண் தேஜுடன் ராக்ஷி கண்ணா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவியின் புகழ்பெற்ற பாடல் ஒன்றையும் ரீமேக் செய்து சாய் தரண் தேஜ் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.