தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வாகா படத்திற்கு பிறகு வீர சிவாஜி, சிங்கப்பூர் டூ சென்னை படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. வேலைக்கு செல்லும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய படமாக சிங்கப்பூர் டூ சென்னை படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்திற்காக விக்ரம் பிரபு சென்னை தமிழில் பேசி நடிக்கிறார். இந்தப்படத்திற்கு பிறகு சுந்தரபாண்டியன் மற்றும் இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார்.மேலும் அந்தப்படத்திற்கு மறைந்த நடிகர் ஜெய்ஷங்கரின் படத்தின் தலைப்பை டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. 1978ல் நடிகர் ஜெய்ஷங்கர் நடித்த ''முடி சூடா மன்னன்'' படத்தின் தலைப்பு தான் விக்ரம் பிரபு படத்திற்கு தலைப்பாக வைத்து இருக்கிறார் இயக்குனர் .இது இயக்குனர் பிரபாகரனின் மூன்றாவது படம். இவர் இயக்கத்தில் சசிக்குமார், லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த ''சுந்தரபாண்டியன்'' படம் அவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது. இப்போது வி்க்ரம் பிரபுவை வைத்து எடுக்கும் படம் ''முடி சூடா மன்னன்''. விக்ரம் பிரபு தற்போது அவரின் இரண்டு படங்களின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். வாகா மற்றும் வீர சிவாஜி படங்களின் ரிலீசுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிருக்கிறார் இயக்குனர்.