இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் ஷங்கர் இயக்கி கொண்டு இருக்கும் படம் எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0. இந்தப்படத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார்கள். இந்தப்படத்தின் முக்கிய காட்சிகள் எல்லாம் டில்லி நேரு அரங்கத்தில் எடுத்து முடித்து, படத்தின் குழுவினர்கள் தற்போது பொலிவியாவிற்கு சென்றிருக்கின்றனர். 45 நாட்களாக டில்லியில் கடும் வெயிலுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதில் ரஜினி - அக்ஷய் மோதும் சண்டைக் காட்சிகள், எமி ஜாக்சன்- ரோபோக்கள் பங்கேற்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டன.இதையடுத்து ஷங்கர் இந்தப்படத்தை 2017ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய போவதாக செய்தி வெளியானது. 20 ஆண்டுகளுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீஸான முதல் படம் '' முதல்வன்''. அதற்கு பிறகு இந்தப்படம் இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. எந்திரன் படம் 2010ல் அக்டோபர் 1 ல் வெளிவந்து ஹிட் கொடுத்தது. இதனால் இந்தப்படத்தையும் ஷங்கர் விழாக்கள் இல்லாத நாட்களில் தான் வெளியிடப் போவதாக கூறப்படுகிறது. இந்தப்படம் 2017ல் தான் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இதற்கிடையில் இப்படம் ரம்ஜானுக்கு வெளியாக போவதாக சில நாட்களுக்கு முன் செய்தி கசிந்தது குறிப்பிடத்தக்கது.