பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என 2 படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வெற்றி கண்ட அருண்குமார், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.அறிமுகப்படமான பண்ணையாரும் பத்மினியும் எதிர்பார்த்த அளவு ஓடாவில்லை. எனினும் அருண்குமார்-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான 2 வது படமான சேதுபதி படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதனால் அருண்குமாரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியைத் தொடர்ந்து விஷாலை வைத்து அருண்குமார், படம் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவல்களை தற்போது இயக்குனர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படம் அதிரடி கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும். இந்தப் படத்தின் திரைக்கதை முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த கதையின் நாயகனாக இதுவரை நான் யாரையும் தேர்வு செய்யவில்லை. தற்போது இப்படம் குறித்த தகவல்களை என்னால் வெளியிடமுடியாது. இப்போதைக்கு இதுவொரு ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பு கலந்த கதை என்பது மட்டும் உறுதி. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்" என தெரிவித்துள்ளார். இந்தப்படதிலும் விஜய் சேதுபதியா அல்லது விஷாலா என்பதை தொடர்ந்து சஸ்பென்சாக வைத்துள்ளார் டைரக்டர் அருண்குமார்.