தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் போதை பொருள் தடுப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு குடோனில் மருந்துகளுக்கு மத்தியில் போதை பொருட்கள் வைத்து கடத்தப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த போதை பொருளின் எடை 21 டன்னாம். சர்வதேச மார்க்கெட்டில் அதன் மதிப்பு 2 ஆயிரம் கோடி என்கிறார்கள். அந்த கடத்தல் கும்பலைச்சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆனால் அவர்களிடம் நடத்தப்படட விசாரனையில், இந்த கடத்தலில் பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி மற்றும் அவரது கணவர் விக்கி கோஸ்வாமி ஆகியோருக்கும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாம். அதோடு, மேலும் பல மாநிலத்தை சேர்ந்தவர்களும் உடந்தையாக இருப்பது தெரிய வந்ததை அடுத்து மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறதாம். மேலும், இந்த போதைப்பொருள் கடத்தலில் நடிகை மம்தா குல்கர்னி, அவரது கணவர் நிக்கி ஆகியோரின் பெரும் இடம்பெற்றிருப்பதை அடுத்து விரைவில் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துவார்கள் என்று மும்பையில் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியில் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள இந்த மம்தா குல்கர்னி, தமிழில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இயக்கிய நண்பர்கள் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.