ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
வசந்தபாலன் இயக்கிய முதல் படம் ஆல்பம். அந்த படத்தின் தோல்வி காரணமாக டைரக்டர் ஷங்கர் படங்கள் பணியாற்றி வந்தவர், பின்னர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெயில் என்ற படத்தை இயக்கினார். அதற்கடுத்து அங்காடித்தெரு, அரவாண், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கினார். இதில், அவர் நாடகக்கலைஞர்கள் சம்பந்தப்பட்ட கதையில் சித்தார்த்-பிருத்விராஜை வைத்து இயக்கிய காவியத்தலைவன் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. அதனால் அடுத்தபடியாக வசந்தபாலன் இயக்கும் படம் குறித்த தகவல் இன் னும் தெரியவில்லை.
இந்த நிலையில், தற்போது அவர், பரத், ராஜகுமாரனை வைத்து விஜய் மில்டன் இயக்கும் கடுகு படத்தில் ஒரு போலீஸ் வேடத்தில் நடிக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. டைரக்டர் ராஜகுமாரன் நாயகனாகவும், பரத் வில்லனாகவும் நடிக் கும் இந்த படத்தில் வசந்தபாலனுக்கு படம் முழுக்க வருவது போன்ற ஒரு போலீஸ் அதிகாரி வேடமாம். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு புதிய படவாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார்கள். ஆக, நடிகர்களாகியிருக்கும் கே.எஸ்.ரவிக் குமார் உள்ளிட்ட சில பிரபல டைரக்டர்கள் வரிசையில் வசந்தபாலனின் பெயரும் தற்போது இடம்பிடித்திருக்கிறது.