டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நாணயம் படத்திற்கு பிறக நான்கு வருடங்களாக சரியான கதைகள் அமையாமல் போராடிக்கொண்டிருந்த சிபிராஜ் 2014ல் நடித்த படம்தன் நாய்கள் ஜாக்கிரதை. ஒரு புதுவித ஓப்பனிங் கொடுக்க வேண்டும என்று காத்திருந்தவர் அந்த படத்தில் நாயுடன் என்ட்ரி கொடுத்தார். அந்த படமும் வெற்றி பெற்றது. அதை யடுத்து போக்கிரிராஜாவில் காமெடி கலந்த நெகடீவ் ரோலில் நடித்த சிபிராஜ்க்கு அந்த படமும் ஓரளவு நல்ல பெயரையே வாங்கிக்கொடுத்தது. அதனால் தற்போது ஜாக்சன் துரையில் புதிய உற்சாகத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், வித்தியாசமான ஹாரர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிபிராஜ்க்கு ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி என இரண்டு ஜோடிகள் இருக்கிறார்களாம். அப்படி இருந்தும் படத்தில் பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லையாம். அதிரடியான காட்சிகள்தான் உள்ளதாம். அதோடு, ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான பர்பாமென்சையும் கொடுத்துவிட்ட சிபிராஜ், இந்த படத்தில் அதையும் தாண்டி ஒரு பன்முக கலைஞனாக தன்னை பிரதிபலித்திருக்கிறாராம. அந்த வகையில், ஜாக்சன்துரை சிபிராஜ்க்கு மிக முக்கியமான படமாக இருக்குமாம்.