டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வாகா படத்தை அடுத்து வீரசிவாஜி, முடிசூடா மன்னன் உள்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம் பிரபு. இதில் முடிசூடா மன்னன் படத்தை அஜீத்தின் 57வது படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், தனது முதல் படமான கும்கியின் இரண்டாம் பாகத்திலும் விக்ரம்பிரபுவே நாயகனாக நடிக்கயிருப்பதாக தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. தனுஷ் நடிப்பில தொடரி படத்தை இயக்கியுள்ள பிரபுசாலமன், அப்படத்தின இறுதி கட்ட பணிகள் ஈடுபட்டிருக்கிறார். அப்பட வேலைகளில் விரைவில் முடியும் தருவாயில் இருப்பதால் தனது அடுத்த படம் குறித்த வேலைகளையும் தொடங்கியிருக்கிறாராம்.
அந்த வகையில், கும்கி-2வை அடுத்து அவர் இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும். அந்த படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்து நாட்டு காடுகளில் நடத்தப்போகிறாராம். முதல் படத்தை விட இரண்டாம் பாகத்தில் ஏதாவது புதிதாக சொல்ல வேண்டும் என்று நினைக்கும் பிரபுசாலமன், தமிழ்நாட்டில் மிருகங்களை வைத்து படமெடுக்க ஏகப்பட்ட கண்டிசன் இருப்பதால், தான் நினைத்தபடி படமாக்க முடியாது என்பதினால்தான் தாய்லாந்தில் படப்பிடிப்பு நடத்துகிறாராம். காரணம், தாய்லாந்தில் மிருகங்களை வைத்து படமெக்க எந்தவித பிரச்சினையும் இல்லையாம். குறிப்பாக, அதற்கு சான்றிதழ் பெற வேண்டிய அவசியமும் இல்லையாம். ஆக, கும்கி-2 கதையை எந்தவித தடையும் இன்றி சுதந்திரமாக படமாக்கப்போகிறாராம் பிரபுசாலமன்.