ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
49ஓ படத்தில் விவசாயி வேடத்தில் கதையின் நாயகனாக நடித்த கவுண்ட மணி, அதையடுத்து வாய்மை என்ற படத்தில் கோட்சூட் அணிந்து டிப்டாப்பாக முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்தார். அதே படத்தில் பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜ் ஆகியோரின் வாரிசுகளான மனோஜ், சாந்தனு, பிரித்வி ஆகியோரும் நடித்துள்ளனர். ஆனால் முன்பே ரிலீசாக வேண்டிய அப்படம் இப்போதுவரை திரைக்கு வரவில்லை. இருப்பினும் அதையடுத்து கவுண்டமணிக்கு எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படம் கிடைத்தது. அதில் கேரவன் உரிமையாளராக நடித்துள்ளார் அவர்.
மேலும், 49ஓ படத்தில் தனது நக்கல் நையாண்டி நடிப்பை ஓரங்கட்டியிருந்த கவுண்டமணி இந்த படத்தில் ஏகப்பட்ட நக்கல் செய்திருக்கிறாராம். குறிப்பாக, படப்பிடிப்ப்புகளுக்கு கேரவன் அனுப்பும் அவர் இளவட்ட ஹீரோக்களை தனது பாணியில் கிண்டல் செய்துள்ளாராம். ஆனா அது அனைவரும் ரசிக்கும் வகையில்தான உள்ளதாம். சம்பந்தப்பட்ட நடிகர்களேகூட அதை ரசிப்பார்கள். கோபப்பட மாட்டார்கள் என்கிறார்கள். அந்த அளவுக்கு ஜாலியாக கமெண்ட் அடித்துள்ளாராம் கவுண்டர்.
அதோடு, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தை அடுத்து கவுண்டமணியிடம் கதை சொல்லி கால்சீட் வாங்க சில டைரக்டர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தொடர்ச்சியாக நடிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லையாம். அதனால் தன்னை தொடர்பு கொள்ளும் டைரக்டர்களிடம், என்ன வச்சி என்னப்பா படமெடுக்கப்போறீங்க. யாராவது இளம் பசங்களை வச்சு படமெடுங்க. அதுதான் உங்களுக்கு நல்லது -என்று தனது பாணியில் அட்வைஸ் கொடுக்கிறாராம் கவுண்டர்.