'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வேறு தொழிலில் சம்பாதித்த பெரும் பணத்துடன் சினிமாத்தொழிலில் ஈடுபட வருபவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகமாகிவிட்டது. அதில் ஆரா சினிமாஸ் நிறுவனமும் ஒன்று. மகேஷ் என்ற இளைஞர் நிர்வகித்து வரும் இந்த நிறுவனம் அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் எண்ணத்தோடு கோடம்பாக்கத்தில் கால் வைத்தது. முதலில் விநியோகஸ்தராக படங்களை ரிலீஸ் செய்து அனுபவத்தைப் பெறுங்கள்... பிறகு அஜித்தின் கால்ஷீட்டை வாங்கித்தருவதாக மகேஷுக்கு அட்வைஸ் பண்ணினார்களாம். அந்த நம்பிக்கையில்தான் உனக்கென்ன வேணும் சொல்லு என்ற படத்தை வாங்கி வெளியிட்டார் மகேஷ். அதில் பல லட்சங்கள் நஷ்டம். ஆனாலும் மனம் தளராமல், உப்புக்கருவாடு, மசாலா படம், அஞ்சல ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். இந்த படங்களும் நஷ்டத்தையே ஏற்படுத்தின.
இதே ரீதியில் சின்ன படங்களை வாங்கி நஷ்டப்பட்டால், அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமல்போய்விடும் என்று எண்ணிய ஆரா சினிமாஸ் மகேஷ், இனி பட விநியோகம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தாராம். இந்நிலையில் அவரது மனதை மாற்றி இனி பெரிய பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடுங்கள் என்று ஆலோசனை சொல்லி இருக்கின்றனர்.
அதன்படி, '10 எண்றதுக்குள்ள' படத்தைத் தொடர்ந்து தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. விக்ரம் உடன் நயன்தாரா, நித்யாமேனன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 70% முடிடைந்துவிட்டன. சமீபத்தில் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டது. 'புலி' தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை சுதந்திர தினத்தன்று ரிலீஸ் செய்ய உள்ளனர்.