ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சில தினங்களுக்கு முன் ஏதோவொரு வேலையாக பிரசாத் லேப் வளாகத்துக்கு வந்திருந்தார் கபாலி பட இயக்குநரான பா.ரஞ்சித். அதே நேரம் அங்குள்ள தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கான காட்சி நடைபெற்று கொண்டிருந்தது. படம் முடிந்து பத்திரிகையாளர்கள் வெளியே வர, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பி.ஆர்.ஓ. ஓடிப்போய் பா.ரஞ்சித்தின் காதில் என்னவோ சொன்னார்.
அவ்வளவுதான்... ஒரே ஓட்டமாக ஓடிய பா.ரஞ்சித், பத்திரிகையாளர்களின் பார்வையில் படாதவாறு ஒளிந்து கொண்டார். அவரிடம் அந்த பி.ஆர்.ஓ. என்ன சொல்லி இருப்பார்? பத்திரிகையாளர்கள் வருகிறார்கள். கபாலி பற்றி ஏதாவது வாயைக்கிளறுவார்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். எதற்கு வம்பு என்று நினைத்தாரோ என்னவோ ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்து கொண்டார் பா.ரஞ்சித்.
அட்டகத்தி, மெட்ராஸ் என பா.ரஞ்சித் இயக்கியது இரண்டே படங்கள்தான். அதற்குள் அவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு அவரது திறமையைவிட மீடியாக்கள் அவருக்கு தந்த ஆதரவும் பாராட்டுக்களும்தான் முக்கிய காரணம். ரஜினி படம் கிடைத்ததும் பழசை மறந்துவிட்டார் பா.ரஞ்சித்.