'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நேர்மையாக நடக்கும் அதிகாரிகளில் முக்கியமானவர், முதன்மையானவர் ஐஏஎஸ்., அதிகாரி சகாயம். இன்றைக்கு தமிழகத்தில் பல இளைஞர்களின் ரோல் மாடலாகவும் திகழ்கிறார். மேலும் இவர் அரசியலில் களம் இறங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதியவர் ஈஸ்வர் இயக்கத்தில், அஸ்வின்குமார், மனீஷாஜித் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ''இணைய தலைமுறை'' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சகாயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் அவருடன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், சமுத்திரகனி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டினர்.
நிகழ்ச்சியில் ஆர்கே செல்வமணி பேசியது ஹைலைட்டாக அமைந்தது. அவர் பேசியதாவது... இன்றைக்கு பல இளைஞர்களின் ரோல் மாடலாக சகாயம் திகழ்கிறார். தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதாவை எதிர்க்க துணிந்த ஒரே நபர் அவர் தான். யாருக்கும் விலை போகாதவர், நிச்சயம் அவர் அரசியலுக்கு வர வேண்டும். ஊழலற்ற சமுதயாத்தை அவர் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறினார்.