ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'தெறி' திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் முழுமையாக வெளியாகவில்லை. விஜய் நடித்த முந்தையப் படங்களின் வசூலைக் காட்டிலும் 'தெறி' படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது. 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனமே விளம்பரப்படுத்தியது. படம் வெளியான முதல் சனி, ஞாயிறுக் கிழமைகள் தவிர இரண்டாவது வாரத்தின் சனி, ஞாயிறுக் கிழமைகளிலும் கூட படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடியுள்ளது.
'தெறி' படத்திற்கு பெரிய அளவில் வேறு எந்தப் படத்தின் போட்டியும் இல்லாததாலும், அதற்கடுத்த வாரம் வெளிவந்த 'வெற்றி வேல்' படத்திற்கும் சரியான வரவேற்பு இல்லாததால் 'தெறி' படம் தொடர்ந்து ஓரளவிற்கு நல்ல வசூலைத் தொடர்ந்தது. படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரையில் சுமார் 130 கோடி ரூபாய் அளவிற்கு படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் ஒரு வாரத்திற்கும் மேல் படம் ஓடினால் மேலும் பத்து கோடிகள் வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால் படம் எப்படியும் 140 கோடி வசூலைத் தாண்டிவிடும். வெளிநாடுகளில் இன்னும் சில நாடுகளில் முழுமையான வசூல் தொகை தெரியாமல் உள்ளது. அது முழுமையாக வந்த பின் இந்த வசூல் தொகையில் இன்னும் கூடுதல் தொகை கணக்கில் வரலாம். இப்போதைக்கு 'தெறி' படம் 150 கோடியைக் கடக்குமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.