பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சரவணன் மீனாட்சி சீசன்-2வில் மீனாட்சியாக நடித்து வருபவர் ரக்ஷிதா. இவரை மீனாட்சியாகத்தான் நேயர்களுக்கு தெரியும். ஆர்ப்பாட்டமில்லாத அசத்தலான நடிப்பின் மூலம் ஒரே சீரியலில் முன்னணி இடத்தை பிடித்து விட்ட இவருக்குள்ளும் தற்போது சினிமா ஆசை துளிர் விட்டிருக்கிறது. குறிப்பாக, அஜித்துடன் நடிக்க வேண்டும என்பதுதான் இவரது பெரிய ஆசையாம்.
இதுபற்றி ரக்ஷிதா கூறுகையில், சரவணன் மீனாட்சி சீரியல் கொடுத்த ரீச் காரணமாக, எனக்கு சினிமாவில் இருந்து பல வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால், நான் நடிக்கிற கேரக்டர் அழுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் தேடிவந்த பல படங்களை தவிர்த்து விட்டு, ராதாமோகனின் உப்புக்கருவாடு படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தேன். அந்த படத்தில் நந்திதா நாயகி என்றபோதும், எனது கதாபாத்திரமும் வெயிட்டாகவே இருந்தது. ஆனபோதும் அந்த படம் வெற்றி பெறாததால் எனது நடிப்பு பேசப்படவில்லை.
இப்படி கூறும் ரக்ஷிதாவுக்கு, சின்னத்திரையை போலவே சினிமாவிலும் ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளதாம். குறிப்பாக, அஜித் அவரது பேவரிட் ஹீரோவாம். அதனால் அவர் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை பெருமையாக ஏற்று நடிப்பாராம். இந்த தகவலை தற்போது தன்னை சந்திக்கும் சினிமா நண்பர்களிடம் கூறி வரும் ரக்ஷிதா, அஜித்தை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும்போது தனது விருப்பத்தை வெளிப்படுத்தவும் நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.