‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. தமிழில் சர்ச்சைகளுக்கு மத்தியில் சூப்பர் ஹிட் அடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகவுள்ளது. ராம் சரண், அல்லு அர்ஜுன், வருண் தேஜ், சாய் தரண் தேஜ், அல்லு அரவிந்த், நிகாரிகா என ஒட்டு மொத்த மெகா ஸ்டார் குடும்பத்தினரும் இப்படத்தின் பூஜையில் கலந்து கொண்டனர். பவர் ஸ்டார் பவன் கல்யாண் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கின்றார். 2017 பொங்கலுக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.