பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷ்ய் குமார், ரஜினியின் எந்திரன்-2 தவிர, பாலிவுட்டில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் ரசிகர் ஒருவர் அக்ஷ்ய் குமாருடன் செல்பி எடுக்க முயன்றார், அப்போது அக்ஷ்ய்குமாரின் பாதுகாவலர், அந்த ரசிகரை தாக்கினார். இந்தசம்பவம் வைரலாக பரவ, அக்ஷ்ய் குமாருக்கு எதிராக கண்டனங்களும் எழுந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியிருக்கிறார் அக்ஷ்ய் குமார்.
இதுகுறித்து அக்ஷ்ய் குமார் கூறியுள்ளதாவது... ''அன்றைக்கு விமானநிலையத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நான் திரும்பி பார்த்தபோது தவறு ஏதுவும் நடைபெறவில்லை. பின்னர் மீடியாக்களில் பார்த்த போது தான் தெரிந்து கொண்டேன், என்னுடைய பாதுகாவலர், ரசிகரை தாக்கியிருக்கிறார். இதையடுத்து எனது பாதுகாவலரை கூப்பிட்டு கண்டித்தேன், எச்சரிக்கையும் செய்துள்ளேன். இந்த சம்பவத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன். சம்பந்தப்பட்ட ரசிகரிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இதுபோன்று எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்து கொள்வேன். ரசிகர்கள் தான் என்னுடைய பலமே என்று கூறியுள்ளார்.