டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான கல்பனா கடந்த ஜனவரி மாதம் 'தோழா' படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத் சென்ற இடத்தில் திடீரென மரணம் அடைந்தார்.. கல்பனாவின் ஒரே மகள் ஸ்ரீமயி.. கல்பனா தனது கணவருடன் விவாகரத்து பெற்றபின்னர் தனது மகளுடன் தனது தாயார் வீட்டில் தான் வசித்து வந்தார். தற்போது பிளஸ் ஒன் படிக்கும் ஸ்ரீமயிக்கு பாட்டியும் அவரது சித்தி ஊர்வசியும் பெரியம்மா கலாரஞ்சனியும் தான் ஆதரவாக இருந்து வருகிறார்கள்.. இந்தநிலையில் தனது தாயைப்போலவே ஸ்ரீமயியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என ஒரு தகவல் கிளம்பியது..
மேலும் தனது சித்தி ஊர்வசியிடமும் தனது நடிப்பாசையை இவர் வெளிப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு காரணமும் உண்டு. சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற 'உன்னோடு கா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தனது சித்தி ஊர்வசியுடன் கலந்துகொண்டார் ஸ்ரீமயி. அதனால் தான் இப்படி ஒரு தகவல் வெளியே பரவியதாம். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றின்போது இதை கடுமையாக மறுத்திருக்கிறார் ஸ்ரீமயி. தான் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும், படிப்பு மட்டுமே தனது இப்போதைய குறிக்கோள் என்றும் கூறியுள்ள ஸ்ரீமயி, பின்னாளில் ஒருவேளை தான் நடிகையானாலும் ஆகலாம் என்றாலும், தனது அம்மாபோல நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன்னால் நடிக்கமுடியுமா என்பது சந்தேகம் தான் என்றும் கூறியிருக்கிறார்.