மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹீரோவானதைத் தொடர்ந்து வானவராயன் வல்லவராயன் படத்தில் மா.கா.பா.ஆனந்த் சினிமாவில் என்ட்ரியானார். அவரைத் தொடர்ந்து இப்போது சாரல் படத்தில் அசார் நாயகனாகியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு விக்ரமன் இயக்கிய உன்னைத்தேடி படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். இந்த படத்தில் ஷோலோ ஹீரோவாக நடித்துள்ளார். இதையடுத்து ஏன்டா தலையில எண்ணெய் தேய்க்கல -என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சாரல் படம் குறித்து அசார் கூறுகையில், இந்த சாரல் படம் காதல் கதையில் உருவாகியிருக்கிறது. இளைஞர் முதல் முதியவர் வரை அனைவரும் தியேட்டருக்கு வந்து பார்க்கும் வகையில் கதை உள்ளது. குறிப்பாக, ஒரு பேருந்து பயணத்தின்போது உருவாகும் காதல் கதைதான் இந்த படம். இதற்கு முன்பு தமிழில் வெளியான காதல், மைனா பட வரிசையில் கண்டிப்பாக இந்த சாரல் படமும் இருக்கும். நான் முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்திருப்பதால் அதை உணர்ந்து கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறேன். அதேபோல் நாயகியாக நடித்துள்ள பிரியங்காவும் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். எந்தவொரு காட்சியாக இருந்தாலும் சிங்கிள் டேக்கில் ஓகே செய்தார் அவர். அந்த வகையில் எனக்கும், அவருக்குமிடையே நல்லதொரு கெமிஸ்ட்ரி உருவாகியிருக்கிறது.
மேலும், இந்த படத்தில் பவர்ஸ்டார் காமெடியனாக நடிக்க, காதல் சுகுமார் எங்கள் காதலுக்கு உதவி செய்பவராக நடித்துள்ளார். காதல் படத்தில் பரத்-சந்தியா ஜோடிக்கு உதவி செய்த அவர் இந்த படத்தில் எனக்கும், பிரியங்காவுக்கும் உதவி செய்திருக்கிறார். அதோடு, இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் இணையதளங்களில் வெளியானதில் இருந்து ஏராளமான ரசிகர்கள் லைக் கொடுத்து வருகின்றனர். அதனால், விரைவில் சாரல் படம் தியேட்டருக்கு வரும் போது ரசிகர்கள் படத்துக்கு பெரிய லைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் அசார்.