‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கே.பாக்யராஜின் சித்து ப்ளஸ்-2 படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. அதையடுத்து வில் அம்பு, நையப்புடை படங்களுக்குப்பிறகு அவர் கைவசம் 11 படங்கள் இருப்பதாக சொல்கிறார். இதுபற்றி சாந்தினி கூறுகையில், சித்து ப்ளஸ்-2 படத்தில் நடித்து வந்தபோது நான் படித்துக்கொண்டிருந்தேன். பாக்யராஜ் சார் அழைத்ததினால்தான் அந்த படத்தில் நடித்தேன். பின்னர் படிப்பை தொடர்ந்ததால் அதன்பிறகு அதிகமான படங்களை ஏற்கவில்லை. நான் ராஜாவாகப்போகிறேன் படத்தில் மட்டுமே நடித்தேன். ஆனால் இப்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டேன். அதனால் முழுநேர நடிகையாகிவிட்டேன்.
அதன்காரணமாக, பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ என்கிற பாரபட்சம் பார்க்காமல் பிடித்தமான கதைகளாக ஏற்று நடிக்கிறேன். அந்த வகையில், தற்போது என் கைவசம் தமிழில் என்னோடு விளையாடு, தாமி, கண்ணுல காச காட்டப்பா உள்பட 8 படங்கள் உள்ளன. தெலுங்கில் 3 படங்களில் உள்ளன. இப்படி ஒரேநேரத்தில் 11 படங்களில் நடிப்பது பெரிய விசயம். இந்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறும்போது நான் முன்னணி நடிகையாகி விடுவேன் என்று கூறும் சாந்தினி, இந்த படங்களில் சில படங்களின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் நான் நடிப்பு, டப்பிங் என இரண்டு பக்கமும் பிசியாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார்.