தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நடித்த கத்தி படத்திற்கு பிறகு இந்தியில் அகிரா படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்வதாக செய்தி வெளியிட்டுள் ளார். அந்த படத்தில் லிங்காவில் நடித்த சோனாக்ஷி சின்ஹா லீடு ரோலில் நடித்துள்ளார். அடுத்தபடியாக தனது முதல் படநாயகனாக அஜீத்தைதான் முருகதாஸ் இயக்குவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் மகேஷ்பாபுவை இயக்கப்போவதாக அறிவித்தார். தமிழ், தெலுங்கில் அப்படம் தயாராகிறது.
அந்த படத்திற்காக ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் தயாராகி விட்டபோதும் மகேஷ்பாபு பிரமோற்சவம் படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால் இன்னும் அந்த படம் தொடங்கப்படவில்லை. மேலும், அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் அப்படத்திற்கு கதாநாயகியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் கோச்சடையான் (அனிமேஷன்) படத்திற்கு தென்னிந்திய படங்களில் நடிக்காத தீபிகா, இந்த படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.