இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ரஜினி இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ள கபாலி படம் ரிலீசுக்கு வேகமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக 5 நாட்களாக டப்பிங் பேசியுள்ளார் ரஜினி. அதோடு, இதற்கு முந்தைய தனது படங்களில் பெரும்பாலும் தனது சமகாலத்து நடிகர் நடிகை களுடன் பயணித்த ரஜினி இந்த படத்தில் அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித் மற்றும் கலையரசன், மைம் கோபி ராதிகா ஆப்தே, ரித்விகா என இளவட்ட நடிகர் நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ஷங்கரின் 2.ஓ படத்திற்காக சென்னை, டெல்லியில் நடந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வந்த ரஜினி, தற்போது சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடந்து வரும் 2.ஓ படப்பிடிபபில் விரைவில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த லொகேசனில் ஜூன் மாதம் 3-ந்தேதி வரை படப்பிடிப்பு தொடர்ச்சியா கநடைபெறுகிறது.
இந்த நிலையில், டில்லியில் நடந்த படப்பிடிப்புக்கு பிறகு ஓய்வில் இருந்து வரும் ரஜினியை, நேற்று சென்னை வந்த இலங்கை நடிகரும், எம்.பியுமான ராம் நாயக் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பு ரஜினியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ரஜினி தரப்பு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் ராம்நாயக் தனது டுவிட்டரில் ரஜினியை தான் சந்தித்த தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.